Published On: Thursday, March 21, 2013
பேய் தேசமும் சிட்டுக் குருவிகளும்

பேய் தேசத்து
பிரேதங்களின்
பின்னிரவு
பிரளயமாய்
உணர்வுகளும்
உரிமைகளும்
பெரும்பான்மையின்
விக்கலுக்கு
விருந்தாகப் பார்க்கிறது
ஜன நாயகம்
விழி பிதிங்கி
மொழி நடுங்கிக் கிடக்கிறது
பழமிருக்க
மலம் தேடும்
காகங்கள் போல
மதவாதம்
மகுடி இசைக்க
சிறுபான்மை எனும்
சிட்டுக் குருவிகள்
பேய் தேசத்தில்
வாழ்ந்தும்
வாழாமலும்
இறந்தும்
இறக்காமலும்.
பிரகாசக்கவி
-எம்.பீ அன்வர் -