எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, December 17, 2015

தலைமைத்துவத்தை நோக்கி

Print Friendly and PDF

மாந்தரினுள்ளம் இருளில்  மூழ்கி
மாக்களின் உணர்வால் கொடுமைகள் செய்தே
பாபக் கடலில் நீந்திய வேளை
கறையகல் கதிரோன் உலகினில் உதித்தார்
இறையருள் புரிந்தான்
நம் நபி பிறந்தார்


ஏகனளித்த திருமறையதனை
எழுதும் கருவி ஏந்திடாமல்
உளமெனும் ஏட்டில் பதிவாய் வைத்தார்
அல்லாஹ் தந்த அருட் கொடை அண்ணல்


மாசறக் கல்வியைப் பெற்றிட வேண்டும்
பாசறை அதற்காய் அமைத்திட வேண்டும்
தேசங்கள் சென்றே கற்றிட வேண்டும்
நாசங்கள் வருவதை தடுத்திட வேண்டும்
உளமதில் ஓர்மை ஊன்றிட வேண்டும்
நலமதை எவர்க்கும் உணர்த்திட வேண்டும்
சாதனை புரிந்து போதனை செய்த
நம் இறசூல் வழி சென்றிட வேண்டும்


குணமதில் மேன்மை அடைந்திட வேண்டும்
தனங்களை நல்வழி செலவிட வேண்டும்
ஏழைகள் வேதனை அறிந்திட வேண்டும்
கோழையாய் வாழ்வதை தவிர்த்திட வேண்டும்
சினமதை தூர எறிந்திட வேண்டும்
உண்மையின்  உருவாம் உத்தம நபியை
உயிராய் மதித்தே நடந்திட வேண்டும்


தீமைகள் உலகில் நீங்கிட வேண்டும்
நீதியும் நேர்மையும் நிலைத்திட வேண்டும்
வம்புகள் வாதங்கள் அழிந்திட வேண்டும்
தர்மங்கள் தோன்றி தழைத்திட வேண்டும்
நான் என்ற சுய நலம் ஒழிந்திட வேண்டும்
நாம் என்ற பொது நலம் ஓங்கிட வேண்டும்
அண்ணல் முஹம்மது அவனிக்கீந்த 
விதி முறை வாழ்வு ஒளி பெற வேண்டும்

கவிதை ஆக்கம் :- பாத்திமா நஸீறா அலி
                  கல்முனை

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2