எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, January 14, 2016

சிசு கொலை தொடர்பாக சந்தேக நபராக கைது செய்யப்பட்ட சிசுவின் தந்தை எதிர்வரும் 25ம் திகதிவரை விளக்கமறியலில்

Print Friendly and PDF

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயின்ஸ்பெரி கீழ்பிரிவு தோட்டத்தில் 12.01.2016 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற சிசு கொலை தொடர்பாக சந்தேக நபராக கைது செய்யப்பட்ட சிசுவின் தந்தை அருள்தாஸ் ஸ்டென்லி 13.01.2016 அன்று அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இவரை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அட்டன் நீதவான் பிரசாத் லியனகே உத்திரவிட்டுள்ளார்.

சிசுவின் சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் மரண பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் சிசுவின் தாய் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஒன்பது மாதங்களான ஆண் சிசுவுக்கு தாய் புட்டிப்பால் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் தாய்க்கும்இ தந்தைக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்படுகையில் தாயின் கையில் இருந்த சிசுவான எஸ்.பிஸாலன் (மாதம் ஒன்பது) தந்தையால் பிடிங்கி நிலத்தில் அடிக்கப்பட்டார்.

அதன்பின் கல் ஒன்றால் தாயும் தாக்கப்பட்டு உள்ள நிலையில் தாயை கொட்டகலை வைத்தியசாலைக்கு அயலவர்களால் கொண்டு செல்லபட்ட வேளையில் அதே நேரம் சிசுவை நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சிசு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. அதேவேளை தாய் கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

எனினும் குறித்த தாய் சிகிச்சை பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய பின் சிசுவின் மரண விசாரணைகள் இடம்பெறும் என தெரியவந்துள்ளது.


(க.கிஷாந்தன்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2