எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, January 15, 2016

தூய பசும்பால் அருந்துவதை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் -பாலர் பாடசாலைகளுக்கு பால் சூடாக்கும் இயந்திரம் வழங்கி வைப்பு

Print Friendly and PDF

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கிவரும் காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் தூய பசும்பால் அருந்துவதை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலர் பாடசாலைகளுக்கு முற்றிலும் இலவசமாக பால் சூடாக்கும் இயந்திரம் வழங்கப்பட்டு வருகின்றது.









மேற்படி பால் சூடாக்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்வு அண்மையில் காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி திருமதி .டுஜித்திரா லிங்கேஸ்வரனினால் தெரிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலைகளுக்கு அதன் பொறுப்பாசிரியைகளிடம் முற்றிலும் இலவசமாக பால் சூடாக்கும் இயந்திரம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த பால் சூடாக்கும் இயந்திரம் பீ.எஸ்.டி.ஜி திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள அஸ்ஸஹ்றா பாலர் பாடசாலை,அப்றார் பாலர் பாடசாலை,அமானா கிட்ஸ் கொலேஜ்,தாருஸ் ஸலாம் பாலர் பாடசாலை,அப்ரா பாலர் பாடசாலை,ஜாமிஉல்ழாபிரீன் பாலர் பாடசாலை,அல் மஜீதிய்யா கிட்ஸ் கொலேஜ்,நூரா பாலர் பாடசாலை உள்ளிட்ட 8 பாலர் பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2