எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, January 12, 2016

தோட்ட நிர்வாகங்கள் தான் நஷ்டத்தில் இயங்குவதாக சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய் - அமைச்சர் லக்ஷமன் கிரிஎல்ல சூளுரை

Print Friendly and PDF

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கட்டாயம் வழங்கப்பட வேண்டும். ஆனால் தோட்ட நிர்வாகங்கள் தான் நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லுவதெல்லாம் அப்பட்டமான பொய். நான் இன்றும் கூறுகிறேன் தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்கும் பட்சத்தில் கம்பனி நிர்வாகங்கள் நமது நாட்டில் நஷ்டத்தை எதிர்கொள்ள தேவையில்லை.

ஆகையால் தோட்டங்களை அரசாங்கத்திடம் கையளியுங்கள் என்பதை வழியுறுத்துருகின்றோம். நாங்கள் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்போம் என சபை முதல்வரும் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷமன் கிரிஎல்ல சூளுரைத்தார்.

அட்டன் நகரில் 11.01.2016 அன்று பிற்பகல் இடம்பெற்ற வைபவமொன்றில் உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

கடந்த வருட ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களில் மஹிந்த ராஜபக்ஷவை தோழ்வியடைய செய்ய வாக்களித்த தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் பொது தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷவை தோழ்வியடைய செய்து இலங்கையில் ஒரு புதிய மாற்றத்தினை உருவாகியுள்ளனர்.

ஜக்கிய தேசிய கட்சியின் ஊடாக பிரதமரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடாக ஜனாதிபதியும் இணைந்த நல்லாட்சி அரசாங்கம் ஒன்று உருவாகுவதற்கு வாக்களித்த எம்மக்களுக்கு அபிவிருத்தி பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்படும்.

இதற்கிடையில் மாற்று அணியினர் பாராளுமன்றத்தில் குழப்ப நிலையையும்இ ஆட்சி மாற்றத்தினையும் கொண்டு வர முனைகின்றனர்.

நமது நாடு வளமிக்க நாடு ஆகும். இங்கு அபிவிருத்தி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த அபிவிருத்தியினை முன்னெடுக்க நல்லாட்சி அரசாங்கம் உருவாகியுள்ளது. இதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் இந்த நல்லாட்சி அரசாங்கம் அதற்கு ஒரு போதும் இடமளிக்காது.

இன்று பதுளை, நுவரெலியா, கண்டி போன்ற மாவட்டங்களில் வாழ்கின்ற மக்களுக்கு துரித கதியிலான அபிவிருத்தி முன்னெடுப்புகளை முனைப்புடன் செயலாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் பல நீண்ட காலமாக பின்வாங்கப்பட்ட மக்களின் தேவைகள் பூரத்தியாக்கப்படும். வீதிகள், போக்குவரத்துகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சீர்செய்யப்படுவதுடன் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாகவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில் தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக பொய்களை தோட்ட நிர்வாகங்கள் கூறி வருகின்றன. இவ்வாறான நிலையில் தோட்டங்கள் நடத்த முடியாத பட்சத்தில் காணப்படுமாயின் நாங்கள் தைரியமாக கூறுகின்றோம் பெருந்தோட்டங்களை அரசிடம் ஒப்படையுங்கள். தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை நாங்கள் வழங்குகின்றோம் என அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

(க.கிஷாந்தன்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2