எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, January 21, 2016

மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியருக்கு பிணை

Print Friendly and PDF

மஸ்கெலியா ஸ்டஸ்பி தேவகந்த என்னும் பிரதேச பாடசாலை ஒன்றில் தரம் 11ல் கல்வி பயிலும் மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் 5000 ரூபா பிணையிலும்இ ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் 20.01.2016 அன்று மஸ்கெலியா பொலிஸாரினால் அட்டன் நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போதே நீதவான் பிரசாத் லியனகே இவ்வாறு விடுவித்துள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 14ம் திகதி குறித்த ஆசிரியரின் வீட்டில் மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக குறித்த மாணவி பொலிஸாரிடம் முறைபாடு செய்ததையடுத்து ஆசிரியர் 19.01.2016 அன்று மஸ்கெலியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

குறித்த பாடசாலையில் கற்பித்துக்கொடுக்கும் திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

மாணவியின் பெற்றோர்கள் 19.01.2016 அன்று அட்டன் கல்வி வலய அதிகாரிகளுக்கு முறையிட்டதன் பின் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த ஆசிரியரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்தமை குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2