எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, March 19, 2016

டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் தீ 30 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

Print Friendly and PDF

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடக்கும்புர – ஒக்ஸ்ப்போட் பகுதியில் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் தீ பற்றியது. 





18.03.2016 அன்று பிற்பகல் வேளையில் பரவிய தீ காரணமாக 50 ஏக்கர் கொண்ட இந்தப்பகுதியில் சுமார் 30 ஏக்கர் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

யாராவது தான் இப்பகுதிக்கு தீ வைத்திருப்பதாக தலவாக்கலை பொலிஸார் சந்தேகப்படுகின்றனர். 

தீயை கட்டுப்படுத்த தலவாக்கலை பொலிஸார் முயற்சித்தபோதும் காற்றின் வேகம் காரணமாக தீ அதிகளவில் பரவியதால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.  இந்த தீயினால் தேயிலை செடிகளும் கருகியுள்ளது.


எனினும் தீ வேகமாக பரவியதன் காரணமாக சுமார் 30 ஏக்கர் எரிந்து சாம்பலாகியுள்ளமை குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2