Published On: Monday, July 25, 2016
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு
அம்பாரை மாவட்ட சமூக சேவைகள் அமைப்பு (அட்சோ) ஏற்பாடு செய்து நடாத்தி வரும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு (24) கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லுரியில் அமைப்பின் தலைவரும், அதிபரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஏ.ஆர்.எம். ஜிப்ரியினால் நடாத்தப்பட்டது.
ஜூலை 17 தொடக்கம் ஆகஸ்ட் 14 வரை அம்பாரை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை, மருதமுனை சாய்ந்தமருது, கல்முனை, இறக்கமாமம், சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச் சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில் ஆகிய பல இடங்களில் இந்த இலவசக் கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.
(எஸ்.அஷ்ரப்கான்)