Published On: Tuesday, January 03, 2017
பொதுமக்களுக்கான அரச சேவையினை தடையின்றி வழங்க சகல உத்தியோகத்தர்கள்புதுவருடத்தில் திடசங்கப்பம்; பூணவேண்டும் - உதவிப் பிரதேச செயலாளர் றிகாஸ்
அரச சேவையினை மக்களுக்கு தடையின்றி வழங்க சகல உத்தியோகத்தர்கள் புதுவருடத்தில்திடசங்கப்பம்; பூனவேண்டும் என சாய்ந்தமருது உதவிப் பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ்தெரிவித்தார்.
புதுவருடத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தங்களதுகடமைகளை சத்தியப் பிரமாணம் செய்து ஆரம்பிக்கும்; நிகழ்வு ,ன்று (02) திங்கட்கிழமைசாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது உதவிப் பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் தலைமையில் இடம்பெற்றஇந்நிகழ்வில் உதவித் திட்டமிடல் உத்தியோகத்தர் எம்.ஜஃபர், நிர்வாக உத்தியோகத்தர்எம்.வாஹிட், சமுர்த்தி தலைப்பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் உள்ளிட்ட பிரதேச செயலகஉத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதன்போது தேசியக் கொடி உதவிப் பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸினால்ஏற்றிவைக்கப்பட்டு தேசியக் கீதம் இசைக்கப்பட்டு காரியாலய நடவடிக்கைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சகல உத்தியோகத்தர்களும் தங்களது புதுவருட கடமையை ஆரம்பிக்குமுகமாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இதன்போது தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,
கடந்த வருடம் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி எமது காரியாலயத்திற்கு நற்பெயரைத்தேடித்தந்த சகல உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்ததுடன் புதுவருடவாழ்த்துக்களையும் உத்தியோகத்தர்களுக்கு தெரிவித்தார்.
பிறந்திருக்கும் புதுவருடத்தில் எமது பிரதேச மக்களுக்கு அரச சேவையினை தடையின்றிவழங்க சகல உத்தியோகத்தர்களும் திடசங்கப்பம் கொள்ள வேண்டும் எனவும்கேட்டுக்கொண்டார்.
2017ம் ஆண்டினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வறுமை ஒழிப்பு ஆண்டாகபிரகடனப்படுத்தியுள்ளார். இத்திட்டம் வெற்றிபெற சகல உத்தியோகத்தர்களும் தங்களது பூரணஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
தற்போது எமது பிரதேச செயலக பிரிவில் டெங்கு காய்ச்சல் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால்மக்கள் பீதியடைந்துள்ளனர். டெங்குக் காய்ச்சலினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில்சுகாதார திணைக்களத்துடன் இணைந்து எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்தீவிரமாகவும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வருகின்றனர். இதனையிட்டு நான்பெருமையடைவதோடு எமது உத்தியோகத்தர்களை பாராட்டுகின்றேன் எனவும் தெரிவித்தார்.
(றியாத் ஏ. மஜீத்)