Published On: Saturday, March 16, 2013
சிங்கள மொழி ஊடகவியலாளர்களை பயிற்றுவிப்பதற்கான ஊடக கருத்தரங்கு

சிங்கள மொழியில் ஊடகவியலாளர்களை பயிற்றுவிப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மேற்கொண்டு வரும் செயற்திட்டத்தின் முதற் கருத்தரங்கு எதிர்வரும் 17ஆம் திகதி குருநாகலையில் நடைபெறும். குருநாகல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 40 முஸ்லிம் இளைஞர் யுவதிகள் இந்த முழுநாள் கருத்தரங்கில் கலந்து கொள்வர்.
அமைப்பின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெறும் இக்கருத்தரங்கில் தினமினவின் முன்னாள் ஆசிரியர் எஸ். தொடவத்த, ராவய செய்தி ஆசிரியர் லசந்த ருஹுனுகே, நிதாவுல் நகர் பணிப்பாளர் மௌலவி எஸ்.எம்எ.ம். நௌஸர் ஊடகவியலாளர் ஜாவித் முனவ்வர் ஆகியோர் விரிவுரைகளை நடத்தவுள்ளதாக அமைப்பின் செயலாளர் எம்.ஏ.எம். நிலாம் தெரிவித்தார்.