Published On: Sunday, March 17, 2013
மத்தளை விமான நிலையம் நாளை ஜனாதிபதியினால் திறந்து வைப்பு
இலங்கையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அம்பாந்தோட்டையிலுள்ள மத்தளையில் நாளை திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படும்.

(ஸிராஜ் எம். சாஜஹான்)