Published On: Tuesday, April 16, 2013
கணவனின் குடியால் மனைவி தீக்குளிப்பு; பதிலுக்கு கணவனும் தூக்கில் தொங்கி தற்கொலை
கணவன் தொடர்ச்சியாக மது அருந்தியமையின் காரணமாக அவமானம், கவலை அடைந்த ஆசிரியை ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கம்பளையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கணவனது செயல் தாங்க முடியாது தற்கொலை செய்து கொண்ட பெண் நவகடதொர பிரதேச பாடசாலை ஒன்றின் ஆசிரியை என தெரியவந்துள்ளது.
இவ் ஆசிரியை நேற்று (15) மாலை வேளையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மனைவியின் உயிரிழப்பு காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான கணவன் இன்று (16) காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை கர்ப்பிணி என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.