எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, April 28, 2013

இளமைக்காலம்

Print Friendly and PDF





 தாழை மரத்தின் கீழே தவழ்ந்து திரிந்த காலம் 
 கோழைத்தனம் மறந்து குதுகலித்த இளமைக்காலம் 

வெட்டு வாய்க்கால் முகத்துவாரத்தில் 
வெற்று மேனியுடன் குளித்த நாட்கள் 
கட்டுக்கடங்க காளையென முட்டி முட்டி மோதி 
அலைகடலில் குதித்த காலம் 

கிண்ணம் பழம் பறிப்பதற்காய் 
கிஞ்சித்தேனும் அச்சமின்றி 
எண்ணியபடி பெரும் கந்து 
ஏறிக்குதித்தது இன்னும் நினைவிருக்கு 

பச்சோலை பாம்பு படுத்திருக்கும் 
பருந்து பூரான் நிறைந்திருக்கும் 
உயிரை துச்சமென மதித்து 
துணிந்தே குரங்கென தாவியதுண்டு 

ஆற்றினுள்ளே நீந்திச் சுழியோடி 
அடித்துப் பிடித்து விளையாடி 
வேற்றுமைகள் யாவும் மறந்தே 
ஓருமையாய் ஓடித்திரிந்த காலம் 

பிட்டும் தேங்காய்ப் பூவுமாய் 
பிள்ளைகள் நிசாரும் பாலாவும் 
கொட்டும் மழையிலும் கூடி 
வட்டக் களரியாய் நின்று 
வாலிபத்தை சுவைத்த காலம் 

வாப்பாவுடன் ஆற்றுக்கு சென்று 
வள்ளல் இலைக்கறி நோண்டி 
தரமான விரால் பிடித்து வந்து 
கலாதியாய் சாப்பிட்ட அலாதியான நாட்கள் 

இன்றைய சந்ததியை பார்த்து 
இதயம் வெதும்பி அழுகின்றேன் 
அன்று நாம் பெற்ற 
அலாதியான அனுபவங்கள் 
இவர்களுக்கில்லையென்று 

எட்டு வயதே நிறையாத 
என்னருமைக் கடைக்குட்டியும் 
எண்ணிரண்டு கிலோப்பொதியை 
எடுத்தே செல்கின்றான் பள்ளிக்கு 

பள்ளி விட்டு வீடு வந்தால் 
பரிவுடன் பெற்றோருடன் பேச நேரமில்லை 
மீண்டும் போகனுமாம் டியூசனுக்கு 
மீட்சியில்லா படிப்பு இது 

புலமைப் பரீட்சையில் தேறனுமாம் 
புதினமாய் இருக்கின்றதெனக்கு 
இளமைக்காலத்தை பொதி சுமந்தே 
இப்படிக் கழிப்பதை பார்ப்பதற்கு 

வீதியில் தூத்தி அடித்த காலம் மாறி 
வீட்டு முற்றத்தில் கிரிக்கட் இன்று 
ஆதியில் இருந்தே பழக்கம் தேய்ந்து 
அனைத்தும் மாறி விட்டதுவே.

-கவிஞர். தம்பிலெப்பை இஸ்மாயில்-

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2