எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, April 08, 2013

முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணி பிரச்சினை நியாயமாக தீர்க்கப்படவேண்டும்

Print Friendly and PDF


முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் காணி வழங்கல் பிரச்சினை நியாயமாக தீர்த்து வைக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது சம்பந்தமாக அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத்
தெரிவித்திருப்பதாவது;

முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணீரூற்று போன்ற கிரமங்களைச்சுற்றி வாழ்ந்த முஸ்லிம்கள் அனைவரும் 90ஆம் ஆண்டு தமது சகல உடமைகளும் பறித்தெடுக்கப்பட்ட நிலையில் வெளியேற்றப்பட்டனர். இவ்வாறு சகல உடமைகளும் பறிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் எந்தவொரு கிராமத்திலிருந்தும் வெளியேற்றப்படவில்லை என்பதை சகலரும் அறிவோம். ஆவர்கள் தமது பணம் நகைகளை எடுத்துக்கொண்டே அகதிகளாக வெளியேறினார்கள். ஆனாலும் தமிழ் மக்களின் காணியற்ற பிரச்சினையையும் நாம் ஒதுக்கி விட முடியாது.

தமிழ் மக்களுக்கு காணிகளை வழங்கிய பின்பே முஸ்லிம்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதாக தெரியவில்லை. காரணம் முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் தமிழ் மக்களுக்கு முன்பாகவே பல வருடங்களுக்கு முன் அகதிகளாகி முகாம்களில் வாழ்ந்து துன்பப்பட்டவர்கள். இந்த வகையில் முதலில் அகதிகளாக்கப்பட்டவர்கள் என்ற வகையில் முஸ்லிம்களுக்கான காணிப்பிரச்சினை முதலில் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்பதே நியாயமானதும், மனிதாபிமானமிக்கதாகவும் இருக்கும்.

தமிழ் முஸ்லிம் ஒற்றுமை மிக அவசியமாக உணரப்பட்டு வரும் இவ்வேளையில் இவ்வாறான சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்ட பின்னரே முஸ்லிம்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தியல் ஏற்கப்படுமாயின் இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களுக்கு தீர்வு வழங்கப்பட்ட பின்னரே தமிழ் மக்களுக்கான தீர்வும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முஸ்லிம் சமூகத்துள் எழலாம் அல்லது தமிழ் முஸ்லிம்களை பிரித்தாள நினைக்கும் பேரினவாதம் அதற்கு தூபமிடலாம்.

எனவே முல்லைத்தீவு மாவட்ட அனைத்து மக்களின் காணிப்பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்பதுடன் முதலில் அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம்களின் காணியில்லா பிரச்சிசை முதலில் தீர்த்து வைக்கப்படுவதற்காக தமிழ் மக்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் நியாயமான முறையில் உதவ முன் வரவேண்டும் வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சி கோரிக்கை விடுக்கிறது என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.

(எஸ்.அஷ்ரப்கான்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2