Published On: Tuesday, April 16, 2013
மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கின்றது: விபரங்கள் நாளை வெளியிடப்படும்
சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
புதிதாக சீர்த்திருத்தம் செய்யப்பட்ட கட்டண விபரங்கள் நாளைய தினம் வெளியிடப்படும். மின்சார உற்பத்தி செலவில் ஏற்பட்ட அதிகரிப்பின் காரணமாக மின்சார கட்டணங்களை அதிகரிக்குமாறு மின்சார சபை பொது பாவனைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
