Published On: Friday, May 24, 2013
யாழ்ப்பாணத்தில் 511ஆவது படையினர் வழங்கிய பசுமாடு தன்சல்
யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள 511ஆவது படையினரின் ஏற்பாட்டில் வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று பகல் 8 குடும்பங்களுக்க பசு மாடுகள் வழங்கப்பட்டதுடன் மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் ஆலயத்திறக்கும் ஒரு பசு மாடு வழங்கப்பட்டது.
511ஆவது படையினரின் ஏற்பாட்டில் மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை 511ஆவது படையணின் கட்டளை அதிகாரி கேணல் சமரசிங்காவும் மற்றும் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ். மாவட்ட படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஹத்துருசிஹங்காவும் உரையாற்றினார்கள்
மற்றும் படைகளின் உயர் அதிகாரிகள் உடுவில் பிரதேச செயலாளர் மு.நந்தகோபாலன் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் எஸ்.முரளிதரன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
(யாழ். செய்தியாளர்)