எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, October 18, 2014

ராஜபக்ஷவை சிறையில் அடைக்காமைக்கு வருந்துகிறேன்: முன்னாள் நீதியரசர்

Print Friendly and PDF

இலங்கை நீதித்துறையில் பக்கச்சார்புகள் இருக்கின்றது என்பதை முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஆற்றிய உரை ஒன்று தெளிவுபடுத்தியுள்ளது. ஹெல்பிங் அம்பாந்தோட்டை ஊழல் குற்றச்சாட்டில் மகிந்த ராஜபக்ஷ­ சிறையில் அடைக்கப்பட வேண்டியவராக இருந்தார்.


ஆனால், அவரை சிறையில் அடைக்காமல் நான் தடுத்தேன் என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கூறுவதில் இருந்து இலங்கையின் நீதித்துறையின் போக்கு எத்தகையதாக இருந்துள்ளது என்பது நிரூபணமாகின்றது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்­சவுக்கும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கும் இடையே முரண்பாட்டு நிலைமை வலுவடைந்து வருகின்றது.

மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகைமை மகிந்த ராஜபக்ச­வுக்கு இல்லை என்று வெளிப்படையாகக் கூறி இருந்த ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, இப்போது தான் வழங்கிய தீர்ப்பு ஒன்றைச் சுட்டிக்காட்டி, மகிந்த ராஜபக்ச­  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு அவரை சிறையில் அடைக்கக் கூடியதான குற்றச்சாட்டு ஒன்று இருந்தது எனவும் எனினும்தான் அதனைச் செய்யாமல் விட்டதனாலேயே அவர் ஜனாதிபதி ஆனார் என்றும் கூறியுள்ளார்.

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2