எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, July 28, 2015

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனைக் கூட்டத்தை 11மணியைத் தாண்டி நடத்த பொலிசார் தடை.

Print Friendly and PDF

இப்பிராந்திய மக்களை கட்சி என்பது வேதம் என்பது போல் மாயையைக் காட்டி தங்களது பிடிக்குள் வைத்துக்கொண்டு இம்மக்களின் அரசியல் உரிமைகளை சூறையாடி அரசியல் அனாதைகளாக்கப் பட்டுள்ள இப்பிராந்திய மக்களை மீட்டு பிராந்தியத்தில் மாற்றங்களைக் கொண்டுவந்து நேர்மை, மனிதநேயம், செயற்திறன், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறும் தன்மை சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம், அபிவிருத்தி, அபிலாசை, அஹ்லாக் மாற்றம் போன்றவற்றை செயட்படுத்தவென ஒன்றுபடுமாறு அறைகூவல் விடுத்தார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏழாம் இலக்க வேட்பாளர் எம்.ஏ.கலீலுர் ரஹுமான்.



அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை பிரதேச மக்கள் பணிமனை அன்குரார்ப்பணமும் புதிய மாற்றத்திற்கான எழுச்சிப் பிரச்சாரக் கூட்டமும் 2015-07-26ம் திகதி கல்முனை கடற்கரை வீதியில் சிரேஷ்ட விரிவுரயளரும் வேட்பாளருமான எம்.ஏ.கலீலுர் ரஹுமான் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். ஜனநாயக அடிப்படையில் பிரச்சாரக் கூட்டம் ஒன்றைக்கூட நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அதற்காக போராட்டம் செய்ய வேண்டி ஏற்பட்டதாகவும் தெரிவித்த கலீலுர் ரஹுமான், சத்தியம் என்றாவது ஒருநாள் வெல்லும் என்றும் உண்மையின் பக்கம் அணிதிரளுமாறும் அங்கு கூடியிருந்த மக்களை கேட்டுக்கொண்டார். கூட்டத்தை 11 மணியுடன் முடிவுக்குக் கொண்டு வருமாறு பொலிசார் வேண்டிக்கொண்டதைத் தொடர்ந்து, தான் இந்த நாட்டின் சட்டத்தை மிகவும் மதிப்பதாக தெரிவித்த அவர் தனது உரையை இடைநடுவே நிறுத்திக்கொண்டார். ஆனாலும் அங்கு கூடியிருந்த மக்கள் ஆராவாரம் செய்து அவரின் பேச்சை அனுமதிக்குமாறு போலீசாரை வேண்டிக்கொண்டதனை பொலிசார் ஏற்க மறுத்தனை அடுத்து ஒலிபெருக்கி இல்லாமல் மக்களோடு உரையாடுமாறு மக்கள் கோஷமிட்டனர். 

அதனை ஏற்று போலீசார் சில நிமிடங்கள் இடம் கொடுத்தனர். அதனை தொடர்ந்து பேசிய அவர், இந்த பிராந்தியம் தலைவர் அஷ்ராப் அவர்களின் மறைவை அடுத்த பதினைந்து வருடங்களாக பாழடைந்து இருப்பதாகவும் அந்த நிலைமை இன்னும் படு மோசமாகிக் கொண்டு செல்வதாகவும், குறைந்தது இந்த முறை தேர்தலிலாவது மக்கள் ஒரு பாரிய அரசியல் தலைமைக்கான மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டுமென்று கேட்டுகொண்டார். அதற்கான வாய்ப்பினை மக்கள் காங்கிரசும் அதன் தலைவர் ரிசார்ட் பதியுதீனும் தற்போது சாத்தியப் படுதியிருபதாகவும், தலைசிறந்த பத்து வேட்பாளர்கள் இப்பணியை நோக்கி பயணிப்பதாகவும், தான் இந்த பணிக்காக தன்னை முழுமையாக அற்பணித்து இந்த மாற்றத்தை ஏற்படுத்த தன்னோடு இணையுமாறும் இனம்காணப்பட்ட நூறு தேவைகளுக்கான தீர்வுகளை நோக்கி நாங்கள் பயணிக வேண்டுமென்றும் இதகாக ஒவ்வொரு வாக்காளரும் இணைந்து போராட தயார்ப்படுமாரும் அறைகூவல் விடுத்தார். மீண்டும் தலையிட்ட பொலிசாரின் வேண்டுகோளை மதித்து பேச்சை நிறுத்திய அவர் தன மக்களோடு எதிர்வரும் நாள்களில் இதர மீடியாகளின் மூலம் தொடர்பு கொள்வதாக தெரிவித்து விடை பெற்றார்.

-எம்.வை.அமீர்-

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2