எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, July 28, 2015

30 வருட குடிநீர்ப் பிரச்சினையை தீர்த்து வைத்தார் அமைச்சர் ஹக்கீம்!

Print Friendly and PDF

அக்கரைப்பற்று இலுக்குச்சேனை பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் நலன் கருதி நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.



இதற்காக அமைக்கப்பட்ட குடிநீர்க் குழாய்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (27) மாலை திறந்து வைத்து பாவணையாளர்களிடம் கையளித்தார்.

இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் சுத்தமான குடிநீர் இன்றி கடந்த 30 வருடங்களாக அவதிப்பட்டு வந்தனர். இந்த விடயம் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அவர் அம்மக்களுக்கு குடிநீர் வசதியை வழங்கி அவர்களின் அவலநிலைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

இந்நிகழ்வில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றஹ்மத் மன்சூர் மு.காவின் செயலாளரும் இராஜாங்க சுகாதார அமைச்சருமான எம்.ரீ.ஹசன் அலி கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் முழக்கம் மஜீட் அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.எல்.எம்.ஹனிபா மதனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அபு அலா -

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2