எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, July 28, 2015

சாரதியும் நாமே நடத்துனரும் நாமே - அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

Print Friendly and PDF

இம்முறை அம்பாறை மாவட்டத்திற்கு தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கட்சியினால் வழங்கப்படுகின்றபோது அது அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கே வழங்கப்படும் வேறு எந்த பிரதேசங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படமாட்டாது. என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ஹக்கீம் தெரிவித்தார்.




ஐக்கிய தேசிய முன்னணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களின் வெற்றிக்காக கிழக்கு மாகாண சபை உறுப்பிரும் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதான வீதி தபாற்கந்தோருக்கு அருகாமையில் நேற்று இரவு (27) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு இங்கு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்தாவது,

அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு இம்முறை தேசியபட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் இதில் எந்தவிதமான சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை இது கட்சியின் தலைமையினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களாகும் இம்முறை அம்பாறை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பாராளுமன்ற தேர்தல்களுக்காக வேட்பாளர்கள் போட்டதில் பல விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்ற நிலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லா வேட்பாளர்களும் புதியவர்களாகவும், அம்பாறை மாவட்டத்தில் பழைய முகங்களா என்ற விமர்சனங்கள் பரவலாக எழுந்துள்ளது.

கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதில் கட்சியின் தொண்டர்கள் முழு அர்ப்பணிபுடன் செயற்பட்ட வேண்டும். நிந்தவூருக்கு தேர்தல் மூலமாகவும் தேசியப்பட்டியல் ஊடாகவும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் வழமையாக வழங்கப்பட்டு வந்துள்ளதாக விமர்சிக்கின்றனர். இப்போதும் நிந்தவூருக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களா என்ற விமர்சனங்களும் தெரிவிக்கப்படுகின்ற காலகட்டத்தில் கட்சியும், தலைமையும் உள்ளது.

தற்பொழுது இம்மாவட்டத்தில் மயில் வந்திருக்கின்றது மயில் என்றால் வடிவேலு வடிவேல் என்றால் மயில் இது முருகப்பெருமானின் வாகனம் அப்படியென்றால் இந்த கட்சியையும் அவர்களையும் அறிந்து கொள்ளுங்கள் இக்கட்சியின் தலைவருக்கு நீதிமன்றத்தின் முன்னால் கல் எறிவதும் சண்டை பிடிப்பதும் வழமை இவரின் கட்சியும் அவரும் வன்னி மாவட்டத்திலே வெற்றி பெறுவது நிட்சயமில்லை அப்படி இருக்க அம்பாறை மாவட்டத்தில் வெற்றி பெருவரா இவரது கட்சி சார்பாக இம்முறை தேர்தலில் போட்டியிடும் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தனது பதவியை இராஜினாமா செய்யாமல் தேர்தல் வேட்பாளர் படிவத்தில் ஒப்பமிட்டுள்ளார்.

இதற்காக தற்போது வழக்கு தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன இவர் தற்செயலாக தெரிவானாலும் பாராளுமன்றம் செல்ல முடியாது அவ்வாறு செல்வாராயின் எனது காதினை அறுப்பேன் இது எந்த சந்தேகமில்லை.

ஐக்கிய தேசிய முன்னணி இம்முறை பெருவெற்றி பெறவுள்ளது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக உள்ளார். இதில் நமது கட்சி இந்த ஆட்சியில் பெரும் பேரம் பேசும் சக்தியாக இருக்க உள்ளது அம்பாறை மாவட்டம் எமது கட்சியின் இதயமாகவுள்ளதால் இங்கு போட்டியிடும் மூன்று வேட்பாளர்களையும் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றிபெறச் செய்யவேண்டும் இந்த பிரதேசத்தில் யானைச்சின்னத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் எனது நண்பர் அவர் வெற்றி பெறமுடியாது.

நான்காவது ஆசனம் கிடைத்தால் அது அம்பாறையில் உள்ளவர் தெரிவு செய்யப்படுவார் அவர் எங்களது வாகனத்திலே நாங்கள் சாரதியாகவும் நடத்துனராகவும் இருப்போம் அவர் புட்போட்டியில் நின்று கொண்டுதான் வரவேண்டும் அவர் ஹெலிக்கப்டேரில் வந்து இறங்குவார். ஆனால் எங்களது வாகனம் நான் சொன்ன இடத்தில் தான் நிற்கவேண்டும் சாரதியும் நாமே, நடத்துனரும் நாமே நாம் எதற்கும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றார்.


அபு அலா -

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2