எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, July 30, 2015

சாய்ந்தமருது திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு!

Print Friendly and PDF

சாய்ந்தமருது திவிநெகும (சமுர்த்தி) வங்கியின் பின்புற வேலி தனிநபர் ஒருவரினால் உடைக்கப்பட்டு வங்கி முகாமையாளர் அச்சுறுத்தப்பட்ட சம்பத்தைக் கண்டித்து  சாய்ந்தமருது திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் வங்கி உத்தியோகத்தர்களும் இன்று (30) வியாழக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனா் 


சாய்ந்தமருது திவிநெகும வங்கிக்கு சொந்தமான பின்புற வளவினை தனிப்பட்ட நபரொருவர் தன்னுடைய வளவு என உரிமைகோரிக்கொண்டு வளவின் பின்புற சுற்றுவேலியினை உடைத்தரிந்து அத்துமீறி உள்ளே புகுந்து வங்கி வளவினுள் நடப்பட்டிருந்த மரக்கண்டுகளையும் சேதப்படுத்தியுள்ளார்.

இன்று காலை கடமைக்கு சென்ற வங்கி முகாமையாளர் தனிநபர் ஒருவர் வங்கி வளாகத்திற்குள் அத்துமீறி நின்றதையும், வேலி உடைக்கப்பட்டதையும் கண்டு அவரிடம் நியாயம் கேட்க சென்றவேளை  அந்த தனிநபர் தகாத வார்த்தை பிரயோத்தை பயம்படுத்தி முகாமையாளரை அச்சுறுத்தியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக முகாமையாளர் பிரதேச செயலாளருக்கு முறையிட்டுள்ளார். இச்சம்பவத்தினை கல்முனை பொலிஸில் முறையிடுமாறு பிரதேச செயலாளர் வழங்கிய ஆலோசனைக்கமைவாக கல்முனை பொலிஸில் முகாமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதே சமயம் முகாமையாளரை அச்சுறுத்திய சம்பவத்தைத கண்டித்தும், முகாமையாளரை அச்சுறுத்திய நபரை கைதுமாறும் கோரியும் வங்கியினை திறக்காமல் வங்கி மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த  சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து சம்பவம் தொடர்பாக கேட்டறிந்துகொண்டு, இது சம்பந்தமாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட திவிநெகு பணிப்பாளர் ஆகியோருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

உத்தியோகத்தர்களின் பணிப்பகிஷ்கரிப்பை எடுத்து முகாமையாளரை அச்சுறுத்திய நபர் கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


(ஹாசிப் யாஸீன்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2