எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, July 29, 2015

உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி

Print Friendly and PDF

மட்டக்களப்பு மகிடித்தீவு மகிழை விளையாட்டுக் கழகமும், மகிழை இளைஞர் கழகமும் இணைந்து நடாத்திய ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.


இவ்விளையாட்டு சுற்றுப் போட்டியானது 1987ம் ஆண்டு, 1991ம் ஆண்டு மகிழடித்தீவில் படுகொலை செய்யப்பட்டு உயிர் நீர்த்த உறவுகளை நினைவு கூறும் முகமாக ஞாபகார்த்த சுற்றுப் போட்டியாக இடம்பெற்றது.

இதன்போது கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக் கழகம் முதலாம் இடத்தையும், மகிடித்தீவு மகிழை விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தையும், அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.


கழக தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி அ.தயாசீலன், மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலய அதிபர் பொ.நேசதுரை, பட்டிப்பளை பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஆசிரியர்களான க.சுந்தரலிங்கம், க.சற்குருலிங்கம், மகிழடித்தீவு ஹசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு மற்றும் பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

(வாழைச்சேனை நிருபர்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2