Published On: Wednesday, July 29, 2015
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவு முழு உலகிற்குமே பேரிழப்பாகும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அனுதாபச் செய்தி

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவு முழு உலகிற்குமே பேரிழப்பாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அச்செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளவாறு,
அவில் பக்கீர் ஜய்னூதீன் அப்துல் கலாம் இந்தியாவின் ஜனாதிபதியாக மாத்திரமின்றி மிகப் பெரும் சொத்தாகவும்முழு இந்தியார்களுமே பார்க்கின்றானர். அவர் இந்தியாவுக்கு மாத்திரமன்றி முழு உலகிற்குமே சொத்தாவார். மிகப்பெரும் விஞ்ஞானியான அப்துல் கலாம் இலங்கையோடு மிகவும் நெருக்கத்தைக் கொண்டிருந்தவர். இலங்கை மீது அதிக அக்கரை கொண்டிருந்தவர். அது மாத்திரமன்றி அவரது உறவினர்கள் கூட இலங்கையில் சிலாபத்தில் வசிக்கின்றனர்.
தான் ஒரு விஞ்ஞானியாக இருந்த போதிலும் எழுத்துறையிலும் அதீத ஆர்வம் காட்டினார். அறிவியல் தொடர்பான பல நூல்களை அவர் எழுதி வெளியிட்டுள்ளார். இந்திய இளைஞர்கள் மத்தியில் கல்வி தொடர்பில் மிகப்பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தார்.
அவர் அண்மையில் இலங்கைக்கு வந்திருந்தபோது அவரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு எமக்குக் கிடைத்தது. இந்தியா மிகப்பெரும் சொத்தை இழந்து விட்டது. இது இந்தியாவிற்கு மாத்திரமின்றி முழு உலகிற்குமே பேரிழப்பாகும் எனத் தெரிவித்துள்ளார்.
(திருச்சி - சாகுல் ஹமீது)