Published On: Thursday, July 30, 2015
மட்டக்களப்பு பாசிக்குடாவில் போதைப் பொருள் அற்ற புது உலகம் படைப்போம் என்ற தொனிப் பொருளில் வீதி நாடகம்

மட்டக்களப்பு பாசிக்குடாவில் போதைப் பொருள் அற்ற புது உலகம் படைப்போம் என்ற தொனிப் பொருளில் வீதி நாடகம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலமும் இடம்பெற்றது.
இதன்போது போதைப் பொருளினால் ஏற்படும் பாதிப்பு தொடர்பான வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் பொது மக்களிடம் வினியோகம் செய்யப்பட்டது.
கல்குடா பொலிஸார், கல்குடா கல்வி வலயம் மற்றும் கல்குடா நாமகள் வித்தியாலய மாணவர்கள் ஆகியோர்கள் இனைந்து மேற்படி நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கான அணுசரணையினை வாழைச்சேனை உலக தரிசன நிறுவனம் வழங்கியிருந்தது.
கல்குடா நாமகள் வித்தியாலயத்திற்கு முன்பாக போதைப் பொருள் அற்ற புது உலகம் படைப்போம் என்ற கருப் பொருளில் வீதி நாடகத்தினை நடாத்தியதுடன், அதன் பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக பாசிக்குடா பிரதான வீதி வழியாக முச்சக்கர வண்டியில் போதைப் பொருள் விழிப்புணர்வு தொடர்பான கருத்துக்களை ஒலி பெருக்கி சாதனம் மூலம் ஒலிபரப்பு செய்து ஊர்வலமாக பாசிக்குடா கடற்கரை வரை சென்று மீண்டும் வீதி நாடகத்தினை சுற்றுலா பயணிகளுக்காக ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் உள்ளுர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.
ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்