Published On: Tuesday, July 28, 2015
ஏறாவூரில் தனியார் தோல் பதனிடும் தொழிற்சாலை முதலமைச்சரால் திறந்து வைப்பு

ஏறாவூரில் தனியார் தோல் பதனிடும் தொழிற்சாலை ஒன்று கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் காபிஸ் நசீர் அகமட் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு ஏறாவூரில் 27.07.2015 ம் திகதி நடைபெற்றது.
தொழிற்சாலை உரிமையாளர் சபீக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ முதலமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
குறிப்பிட்ட நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் அங்கு மரக்கன்றொன்றையும் நட்டிவைத்தமை குறிப்பிடத்தக்கது.