எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, July 30, 2015

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலைப் பிரதேசத்தில் முச்சக்கரவண்டி விபத்து

Print Friendly and PDF

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலைப் பிரதேசத்தில் 30.07.2015 காலை 6.00 மணியளவில் முச்சக்கரவண்டியொன்று விபத்திற்குள்ளானதில் அதன் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.


ஏறாவூர் -மீராகேணி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய நிசார் என்றழைக்கப்படும் ஏஎல் பரீட் என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

மரக்கறி வியாபாரியான இவர் ஏறாவூரிலிருந்து சித்தாண்டி வாராந்த சந்தைக்குச் சென்றுகொண்டிருந்தபோது முச்சக்கரவண்டி பாதையைவிட்டு விலகி மரத்துடன் மோதியுள்ளது. அதிக வேகமே விபத்திற்குக் காரணமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனால் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.
ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 (ஏறாவூர்   நிருபர்)ஏஎம் றிகாஸ்

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2