Published On: Tuesday, July 28, 2015
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ.மு.காங்கிரஸ் ஆசனம் பெறுவது உறுதியாகிவிட்டது -முதலமைச்சர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெறும் பிரச்சாரக்கூட்டங்களில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டு தங்கள் ஆதரவினைத் தெரிவித்து வருகின்றனர்.
ஏறாவூரில் இடம்பெற்ற கூட்டத்திற்கு பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்ட கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமதை ஆதரவாளர்கள் தூக்கிச் சென்று மேடையேற்றினர். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ.மு.கா. ஒரு ஆசனம் பெற்றுக்கொள்வது உறுதியாகிவிட்டது என்று முதலமைச்சர் அங்கு உரையற்றும்போது தெரிவித்தார்.