எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, July 28, 2015

தேர்தல் வன்முறைச் சம்பவமொன்று மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள இடம்பெற்றுள்ளது.

Print Friendly and PDF

தேர்தல் வன்முறைச் சம்பவமொன்று மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மிச் நகர் பிரதேசத்தில் 28.07.2015 அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.


ஏறாவூர் மிச்நகர் ஆயுர்வேத வைத்தியசாலை வீதியிலுள்ள வீடொன்றின்மீது கோஷ்டியொன்று தாக்குதல் நடாத்தியுள்ளது. இதனால் அந்த வீட்டு கதவு, யன்னல் மற்றும் தளபாடங்கள் என்பனவும் சேதமடைந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்தவர்கள் உறங்கிக்கொண்டிருந்தவேளை (கேட்) படலையை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த கோஷ்டியினர் உடைமைகளுக்குச் சேதம் ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களான தம்மை மற்றுமொரு கட்சிக்கு ஆதரவாக செயற்படுமாறு கடந்தசில தினங்களுக்கு முன்னர் ஒரு குழுவினரால் கேட்கப்பட்டது. பணம் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 
ஆனால் தாம் முடியாது என மறுத்ததன் காரணமாக அவர்களினால் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாமென தாம் சந்தேகிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள்  தெரிவிக்கின்றனர். 

(ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2