Published On: Tuesday, July 28, 2015
அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதைப் பொருள் ஒழிப்பு மாதத்தையொட்டி ஏறாவூர் நகரில் பேரணி

ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட இப்பேரணியில் சுகாதாரத் திணைக்களம், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சமூக நல அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களும் பங்கேற்றனர்.
ஏறாவூர் நகர சபைக்கு முன்பாக இருந்து ஆரம்பமான இப்பேரணி பிரதான வீதிவழியாக வாளியப்பா தைக்கா பிரதேசத்தில் நிறைவுற்றது. அங்கு கருத்துரை நிகழ்வும் நடைபெற்றது. பேரணியில் கலந்துகொண்டவர்கள் பதாதைகள் மற்றும் சுலோகங்களையும் ஏந்திச் சென்றனர்.