Published On: Wednesday, July 29, 2015
காத்தான்குடி தள வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை

காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பத்துக்கும் மேற்பட்ட கிரமங்களில் வாழும் மக்களின் பிரதான வைத்தியசாலையாக காணப்படுவது காத்தான்குடி தள வைத்தியசாலையாகும்.
கடந்த காலங்களில் 80இலட்சம் ரூபா செலவில் நவீன வசதிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் நோயாளர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் இவ் வைத்தியசாலை காணப்படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நோயாளர்களுக்கான பல வசதிகள் இருந்தாலும் முக்கிய தேவையான வைத்தியர் பற்றாக்குறை நிலவுகிறது.
இவ் வைத்தியசாலைக்கு கிளினிக் தினங்களில் நானூறுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகைதரும் நிலையில் ஒரு வைத்தியர் மாத்திரமே நோயாளிகளை பரிசோதனை செய்கிறார் இதனால் அதிகமான நேரம் நோயாளிகள் காத்திருக்க வேண்டியுள்ளது. நோயாளர்களிள் அதிகமானவர்கள் வயோதிபர்களும் பெண்களுக்கு உள்ளதால் பெரும் சிரமத்திற்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது என விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக வைத்தியசாலை ஊழியர்களிடம் நோயாளர்கள் முறைப்பாடு தெறிவித்த போதிலும் அவர்கள் கவனத்திற்கொள்ளாமல் இருக்கின்றனர் என நோயாளிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக காத்தான்குடி தள வைத்தியசாலை வைத்திய அதிகாரி M.S.M.ஜாபீர் அவர்களை தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் பலனளிக்கவில்லை.
இம்மக்களின் நீண்டகால தீர்க்கப்படாத வைத்தியர் பற்றாக்குறைப் பிரச்சினையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கோள்ளுமாறு பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
இ(ஜுனைட்.எம்.பஹ்த்)