எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, August 09, 2015

டோர்னியர் விமான விபத்தில் 3 விமானிகள் உயரிழந்தது உறுதி

Print Friendly and PDF


டோர்னியர் விமான விபத்தில் 3 விமானிகள் உயரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய ஐ.ஜி. சர்மா கூறியுள்ளார்.

கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான டோர்னியர் ரக சிறிய விமானம், கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில், சுபாஷ் சுரேஷ், எம்.கே.டோனி ஆகிய விமானிகளும், துணை கமாண்டர் வித்யாசாகரும் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது இரவு சுமார் 9.30 மணியளவில் திடீரென காணாமல் போனது. இதையடுத்து, தமிழக மற்றும் இந்திய கடலோர காவல்படை மற்றும் கடற்படை வீரர்கள் அந்த விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தன. மேலும், பாராசூட் மூலமும், நீர் மூழ்கி கப்பல் மூலமும் தேடுதல் பணி நடைபெற்றது.

இந்நிலையில், கடந்த மாதம் (ஜூலை) 10ஆம் தேதி பாண்டிச்சேரி அருகே கடலில் டோர்னியர் விமானத்தின் பாகங்கள் கிடைத்தது. அதைத் தொடர்ந்து நடத்திய தேடுதலில், மறுநாள் (ஜூலை 11ஆம் தேதி) 3 உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த உடல்கள் டி.என்.ஏ. ஆய்வுக்காக அனுப்பட்டது. இந்நிலையில், அந்த உடல்கள் டோர்னியர் விமான விபத்தில் உயிரிழந்த 3 விமானிகள் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐ.ஜி. சர்மா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''கடலில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளின் டிஎன்ஏ சோதனையில், டோர்னியர் விமான விபத்தில் 3 விமானிகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் 11ஆம் தேதி மாலை சென்னையில் மூன்று விமானிகளுக்கும் அஞ்சலி செலுத்தப்படும்'' என்றார்.

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2