Published On: Tuesday, August 18, 2015
வாக்களித்த மை காயும் முன் பொத்துவிலில் சிலை
பொத்துவில் பகுதியில் பிள்ளையார் சிலையும் புத்தர் சிலையும் திடீரென உருவெடுத்துள்ளதால் அங்கு பெரும் பதற்ற நிலை தோன்றியுள்ளது.
நேற்று முன்தினம் (16) ஆம் திகதி இல்லாத இந்த பிள்ளையார் சிலையும் புத்தர் சிலையும் நேற்றிரவு திங்கட்கிழமை (17) எவ்வாறு உருவாக்கம் பெற்றது என முஸ்லிம் மக்களிடத்தில் பாரிய பிரச்சினையை உருவாக்கியுள்ளதால் அங்கு தமிழ்இ சிங்கள மக்களிடத்தில் இனக்கலவரங்கள் உண்டாகும் நிலையும் தோன்றியுள்ளது.
இவ்வாறு வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையும் புத்தர் சிலையும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான ஆர்.டி.ஏ. காணிக்குள் வைக்கப்பட்டுள்ளமையும் பல்லாண்டு காலமாக ஒற்றுமைப்பட்டு வாழும் தமிழ் முஸ்லிம் சிங்கள உறவு நிலை பாதிப்படையாத வகையில் இதற்குரிய தீர்வினை அரசாங்க அதிகாரிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.
அபு அலா , தாஜகான்
