எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, August 14, 2015

வாழைச்சேனை பிறைந்துரைச்சேனையில் கைகலப்பு

Print Friendly and PDF

வாழைச்சேனை பிறைந்துரைச்சேனையில் கைகலப்பு  வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துரைச்சேனை நூரியா முஹைதீன் ஜூம்ஆப் பள்ளிவயாலில் இன்று ஜூம்ஆத் தொழுகையின் பின் பள்ளிவாயல் தலைவரைத் தாக்க வந்த குழுவினரின் தாக்குதலில் இரண்டு இளைஞர்கள் தாக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரித்தனர். 


பிறைந்துரைச்சேனை நூரியா முஹைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயலில் இன்று இடம் பெற்ற ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் வினியோகிக்கப்பட்ட ஒரு துண்டுப்பிரசுரம் தொடர்பாக பள்ளிவாயல் தலைவரிடம் விளக்கம் கேட்க வந்த ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பள்ளிவாயல் தலைவரைத் தாக்க முட்பட்ட போது அதனைத் தடுக்க முற்பட்ட இளைஞர்களே காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை சம் சம் வீதியைச் சேர்ந்த எம்.எல்.மதீன் (வயது – 32) மற்றும் பிறைந்துரைச்சேனை ஐஸ் பெக்டரி வீதியைச் சேர்ந்த காதர் இஸ்பாக் (வயது 30) என்ற இளைஞர்களுமே காயமடைந்தவர்களாவார்.   இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2