எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, December 27, 2015

யுத்தத்தின் விளைவாக 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட உறவுகள் தாய் நாட்டை விட்டு இடம்பெயர்ந்து வெளிநாடுகளில்

Print Friendly and PDF

யுத்தத்தின் விளைவாக 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட உறவுகள் தாய் நாட்டை விட்டு இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளதுடன், இன்னும் தென்னிந்திய முகாம்களில் 125000க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் அகதிகளாக உள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமனற் உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்தார்.

அழிக்கப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்ட ஓர் இனத்தின் பிரிதிநிநிதிகளாக நாங்கள் இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

வாகரை மாங்கேணியில் பெரேயா ஜெப வீட்டில் பாஸ்டர் ஸ்ரீகாந் தலைமையில் நடைபெற்ற நத்தார் தின ஆராதனையினல் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 30 வருட கால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் கடவுளை நோக்கி பலவாறும் வேண்டினார்கள். உங்கள் வேண்டுதல்களை கேட்டு இறைவன் அமைதியையும் சமாதானத்தினையும் ஏற்படுத்தியுள்ளார். எமக்கு இப்போது கிடைத்துள்ள அமைதி நிலைத்திருக்க வேண்டும்.

இழைக்கப்பட்ட அநிதீகளுக்கான தீர்வு கிடைக்கப்பெற வேண்டும். அதேவேளையில் எமது ஆயிரக்கணக்காக மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு மீளளிக்கப்படாமல் உள்ளது. இந்தக் காணிகள் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்படல் வேண்டும்.

இதேபோல் தமிழ் கைதிகள் அனைவரும் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும். வாகரைப் பிரதேசம் உட்பட எமது வடகிழக்கு பகுதிகள் கடந்த கால யுத்தத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளாகும்.

மூன்று தசாப்த காலமாக எமது தேசத்திலே யுத்தம் நடைபெற்றதை நாம் அறிவோம்;. இந்த யுத்தத்தின் விளைவாக பல இழப்புக்களை நாம் சந்தித்துள்ளோம். 150000க்கும் மேற்பட்ட எமது உறவுகள் உயிரிழந்துள்ளார்கள். 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட உறவுகள் தாய் நாட்டை விட்டு இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இன்னும் தென்னிந்திய முகாம்களில் 125000க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் அகதிகளாக உள்ளனர். பலர் அங்கங்களை இழந்து உடமைகளை இழந்து இருப்பிடங்களை இழந்து அநாதைகளாக நாங்கள் மாற்றப்பட்ட காலத்தை நாம் அறிவோம் என்றார்.

ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2