எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, January 08, 2016

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: பிப். 2 முதல் உச்ச நீதிமன்றம் இறுதி விசாரணை

Print Friendly and PDF

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 2ம் தேதி முதல் இறுதி விசாரணை நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிந்து வழக்கு பிப்ரவரி 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டின்போது, தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதி குமாரசாமி ரத்து செய்ததுடன், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.

பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரகோஷ், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மேல் முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட நால்வர் தரப்பிலும் இருந்து ஆயிரக்கணக்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதனிடையே, கர்நாடாக, திமுக தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீடு மனு மீதான வழக்கில் விசாரணை நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.கே.அகர்வாலுக்கு பதிலாக நீதிபதி அமித்தவா ராய் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வுவெள்ளிக்கிழமை  முதல் விசாரணையை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2