எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, January 08, 2016

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க முதலமைச்சரின் அறிவுருத்தல் கடிதத்தில் உத்தரவு

Print Friendly and PDF

கிழக்கு மாகாணத்தில் மீண்டும் அடைமழை ஆரம்பித்துள்ளதால் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கதன சகல நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்குமாறு கோரிய கடிதம் ஒன்றை மூன்று மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளாதாக முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் இன்று தெரிவித்தார்

அவர் மேலும் கூறுகையில்

நேற்று பெய்த மழையினால் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாரியளவிலான பொதுமக்கள் தங்களின் இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தும் சென்றுள்ளனர். அவர்களுக்கான நிவாரனங்களையும், உலர் உணவுகளை வழங்குவதற்கு உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும், இன்றும் வியாழக்கிழமை காலநிலை மிக மோசமாகவுள்ளதால் பாதிப்புக்குள்ளாகும் நிலைமையிலுள்ள மக்களை உடனடியாக வேறிடங்களுக்கு மாற்றுவதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுப்பதுடன் அவர்களுக்கான நிவாரனங்கள், உலர் உணவுகள் வழங்குவதற்கும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வேண்டி முதமலமைச்சர் செயினுலாப்தீன் ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் அறிவுருத்தல்களுக்கு அமைவாக மூன்று மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும் அவசர அறிக்கை விடுத்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் மேலும் தெரிவித்தார்.

அபு அலா - 

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2