எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, January 06, 2016

பாகிஸ்தான் நாட்டு பிரதமரின் கண்டி விஜயம்

Print Friendly and PDF

இலங்கைக்கு விசேட விஜயத்தை மேற்கொண்டு வருகைதந்துள்ள பாகிஸ்தான் நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப் 06.01.2016 அன்று கண்டி தலதாமாளிகைக்கு விஜயத்தை மேற்கொண்டார். இவரை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலிம் மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட ஏனையோர் இவர்க்கு செங்கம்பள வரவேற்பு அளித்ததுடன் தலதாமாளிகை தியவடனேநிலமே பிரதிப் நிலங்க தேல பாரம்பரிய ஆடை அணிந்து விசேட வரவேற்பு செய்தார். பின் மலர் பூஜை வழிபாட்டில் ஈடுப்பட்டதன் பின் டீ.எஸ்.சேனாநாயக்க வீதியில் அமைந்துள்ள முன்னால் பாகிஸ்தானின் பிரதமர் அலி ஜீன்னா ஞாபகார்த்த மண்டபத்தையும் பார்வையிட சென்றுள்ளார்.




இதன்பின் தேசிய அருங்காட்சி சாலையில் பாகிஸ்தானின் பண்டைய கால பொக்கிஷங்களை பார்வையிட்டதன் பின் பேராதனை தேசிய பூங்காவில் மரநடுகை நிகழ்வு ஒன்றிலும் கலந்து கொண்டு கண்டி விஜயத்திற்கான ஞாபகார்த்த மரநடுகையில் ஈடுப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)


Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2