எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, January 15, 2016

ஏன் நாங்கள் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை ( SAITM) நிராகரிக்க வேண்டும்

Print Friendly and PDF

(2016.01.13) இலங்கையிலுள்ள ஏழு அரச மருத்துவ பல்கலைக்கழகங்கள் இணைந்து கொழும்பிலும் யாழ். பல்கலைக்கழகத்தினால் யாழிலும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியினால் இலங்கைக்கு ஏற்படும் விபரீதங்கள் பற்றியும் அரச பல்கலைக்கழகங்களில் மருத்துவத்துறை கற்கும் மாணவர்களுக்கு ஏற்படும் அநீதி பற்றியும் சாத்வீகப் போராட்டமொன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.




பொதுமக்களில் பலருக்கு இது விடயத்தில் உள்ள தெளிவின்மையை களைவதற்கும் பணத்துக்கு விலை போன சில அரசியல்வாதிகள் மற்றும் கல்வி கற்று பட்டம் பல பெற்றும் முட்டாள்களாய் நடந்து கொள்ளும் அறிவீனர்கள் இது பற்றி கூறும் கருத்துக்களில் உள்ள பொய்களை அம்பலப்படுத்தும் வண்ணமும் இக்கட்டுரை வரையப்படுகின்றது.

அரச பல்கலைக்கழகங்களின் வளங்களை சூறையாடி இலவச கல்வியை முறையை செயலிழக்கச்செய்து அவற்றிற்கு மாற்றீடாக தனியார் பல்கலைக்கழகங்களை மக்கள் முன் அறிமுகப்படுத்தி பணம் சம்பாதிக்கும் முறை இன்று நேற்று அல்ல சுமார் 30 வருடங்களுக்கு முன்பிருந்தே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.

இதற்கெதிராக மாணவர்கள் ஆட்ஷேபனை தெரிவித்த போதெல்லாம் அவர்களின் குரல் வளைகள் நசுக்கப்பட்டன. அதிகாரத்திலிருந்தோர் பணத்துக்கு அடிமையாகி அதர்மத்தின் பக்கம் தலைசாய்த்தனர்.

விளைவு...??? தனியார் பல்கலைக்கழங்கள் ஆங்காங்கே தலைதூக்க தொடங்கின. அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் பணம் கொடுத்து வாங்கப்பட்டனர். அரச பல்கலைக்கழகங்களின் கல்வி கற்கும் மாணவர்களின் நிலை அந்தோ பரிதாபமானது. கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

இலவசக்கல்வி முறை பாதிக்கப்படுவதனை எதிர்த்து மாணவர்கள் போராடத்தொடங்கினர்.

இதனை சகிக்க முடியாத அதிகாரத்திலிருந்தோரால் மாணவர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.இற்றை வரை இதற்காக போராடிய மாணவர் ஒன்றியத்தின் தலைவர்களில் சுமார் 10 பேர் வரிசையாக கடத்தப்பட்டு மிகவும் மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

இதன்தொடராகவே கடந்த 2010 ஆம் ஆண்டு  மாலபே எனும் இடத்தில் SAITM  எனும் தனியார் மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

இதன் விளைவுகள்.
1. இதுவரை காலமும் மாவட்டத்தில் அதிகூடிய சித்திகளைப்பெற்று  திறமை அடிப்படையில் வடிகட்டப்பட்டு மருத்துவ துறை கற்பதற்கு தெரிவாகின்றனர்.
இதற்காக ஆகக்குறைந்தது A 2 B அல்லது   2AB  பெற்றிருக்க வேண்டிய நிலைமையில் வெறுனே 3 S  களை பெற்ற ஒருவரால் பணம் இருந்தால் மருத்துவம் கற்கும் நிலை தோன்றியுள்ளது.

2. இதன் காரணமாக தரமற்ற வைத்திய சமுதாயம்இநம்பகத்தன்மை குறைந்த சுகாதாரத்துறை உருவாகும் ஆபத்து உள்ளது.

3. இலங்கை அல்லாத வேறுநாடுகளில் மருத்துவம் பயிலும் ஒருவர் இலங்கையில் தொழில் புரிய வேண்டுமாயின் அரச மருத்துல சங்கத்தினால் நடாத்தப்படும் பரீட்சையில் சித்தி அடைய வேண்டும்.

ஆனால் மாலபே தனியார் கல்லூரி மாணவர்கள் இவ்வாறான பரீட்சை எழுதாமலேயே நேரடியாக தொழில் புரிய முடியும் என்பதனால் இவர்களது திறமையின்மை மூடி மறைக்கப்பட்டு மற்றும் நம்பகத்தன்மையற்ற வைத்தியம் மக்களை அடைய வழிகோலும்.

4. இவர்களுக்கென்று தனியான போதனா வைத்தியசாலை கட்டிகொடுக்கப்பட்ட போதிலும் தமது மருத்துவ பயிற்சியினை  (clinical practice )  கொழும்பு தேசிய வைத்தியசாலை, ஹோமாகம,மஹரகம,அவிஸ்ஸாவலை,ஜெயவர்தனபுர,நாரஹேன்பிட்டிய ஆகிய அரச வைத்தியசாலைகளில் தொடர அனுமதி கேட்டு வழக்குதாக்கல் செய்திருப்பதனால் திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு களனி,கொழும்பு,ஜெயவர்தனபுர பல்கலைக்கழங்களில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.

5. பொதுவாக ஒரு மருத்துவ மாணவனுக்குஃவைத்தியருக்கு மிக அவசியமான பாடங்களான anatomy , physiology , biochemistry ஆகிய மூன்று பாடங்களும் முழுமையாக இரண்டு வருடங்கள் அக்குவேரு ஆணிவேராக கற்பிக்கப்படும்.ஆனால் இத்தனியார் கல்லூரியில் வெறும் ஆறே மாதங்கள் நுனிப்புல் மேய்வது போல் கற்பிக்கப்படுகிறது.

இதிலிருந்து இக் கல்லூரியிலிருந்து வெளியாகும் மாணவனின் தகைமை பற்றி பாமர மகனால் கூட கூறிவிடமுடியும்.

6. ஒவ்வொரு வருடமும் அரச பல்கலைக்கழகங்களிலிருநது சுமார் 1000 மருத்துவ பட்டதாரிகள் வெளியாகி மருத்துவ தொழில்பயிற்சியினை
(Internship) மேற்கொள்ளும் நிலையில் அவ்வெண்ணிக்கையினை 600 ஆக குறைத்து  தனியார் கல்லூரி மாணவர்கள் 400 களை திட்டமிட்டிருப்பதாக தெரியவருகினறது. இதன் திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு கல்வி பயிலும் அரச மருத்துவ மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

இவ்வாறாக அரச பல்கலைக்கழகங்களின் மருத்துவ மாணவர்களின் வளங்களை சூறையாடி ; திறமை குன்றிய , நம்பகத்தன்மை அற்ற சுகாதாரத்தை வழங்கும் வழங்கும் வைத்தியர்களை உருவாக்கும் பொறிமுறையை ஒழிக்க இச்சாத்வீகப் போராட்டத்தில் நாமும் இணைவோம்.

MB. முஹம்மது ஸில்மி,
மருத்துவ மாணவன்,
கிழக்கு பல்கலைக்கழகம்.


Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2