Published On: Friday, April 08, 2016
நற்பிட்டிமுனை அஸ்ரப் சதுக்கம் மைதான அபிவிருத்திக்கு ஹரீசினால் 30 இலட்சம் ஒதுக்கீடு
நற்பிட்டிமுனை அஸ்ரப் சதுக்கமைதானம் மிக நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாமல் குறையாகக் கிடப்பதனை விளையாட்டுத் துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரிஸ் (பா.உ) அவர்களிடம், முன்னாள் கல்முனை மாநகர சபையின் உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடஉறுப்பினருமான யூ.ஏல்.தௌபீக் கவனத்திற்கு கொண்டு வந்ததற் கிணங்க மைதான அபிவிருத்திக்கென 03 மில்லியன் ரூபா நிதியினை முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சின் MS/06/04/03-18ம் இலக்க 2016.03.24ம் திகதியிடப்பட்ட கடிதம் கல்முனை பிரதேச செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் இந்நிதியினைக் கொண்டு மைதானத்திற்கு மண்ணிரப்புவதற்கான வேலைத்திட்டத்தினைஆரம்பிக்கவுள் ளதாகவும் யூ.எல் தௌபீக் தெரிவித்தார்.
பிரதிஅமைச்சரினால் ஏற்கனவேமைதானத்தின் சுற்றுமதிலுக்கானஅடிக்கல் நடப்பட்டுசெய்துமுடிக்கப்பட்டவே லைகளில் குறையாகஉள்ளஅபிவிருத்திகள் மற்றும் அதிதிகள் அரங்குநுழைவாயில் எனமீதமாகவுள்ளஅபிவிருத்திவேலை களைஅடுத்தகட்டநிதிஒதுக்கீடுகளி ல் செய்துதருவதற்குபிரதிஅமைச்சர் உறுதியளித்ததாக யூ.எல் தௌபீக் மேலும் தெரிவித்தார்.
மேலும் இவ்வருட பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பிரதிஅமைச்சர் அவர்களினால் ஜூம்ஆபள்ளிவாசல் உள்ளக வீதி புணரமைப்பிற்காக 5 லட்சம் ரூபாய்களையும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பங்களிப்புச் செய்யும் வகையில் 2 லட்சம் ரூபாய்களும் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.