எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, April 06, 2016

சாய்ந்தமருதில் திவிநெகும வெற்றியாளர்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு!

Print Friendly and PDF

திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் திவிநெகும மானிய உதவி பெறும் குடும்பங்களுக்கான வீடமைப்பு அபிவிருத்தி லொத்தர் சீட்டிழுப்பில் வெற்றி பெற்ற சாய்ந்தமருது பிரதேச செயலக திவிநெகும பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு இன்று (06) புதன்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.





சாய்ந்தமருது பிரதேச திவிநெகும முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசோலையினை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் திவிநெகும சமுதாய அடிப்படை வங்கிச் சங்கத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.றிபாயா, திவிநெகும முகாமைமயாளர்களான ஏ.ஆர்.எம்.பர்ஹான், எம்.எஸ்.எம்.மனாஸ், கிராம சேவக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நளீர், உதவி முகாமையாளர் ஏ.எம்.எம்.றியாத் உள்ளிட்ட திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம சேவக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

திவிநெகும வீடமைப்பு அபிவிருத்தி லொத்தர் சீட்டிழுப்பில் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் 2014ம் ஆண்டு சீட்டிழுப்பில் 3 பேரும், 2015ம் ஆண்டு சீட்டிழுப்பில் 6 பேருமாக ஒன்பது பேருக்கு தலா 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


(ஹாசிப் யாஸீன்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2