Published On: Wednesday, July 13, 2016
கல்முனை அபிவிருத்திற்கு முழு வீச்சில் செயற்படவுள்ளேன் - பிரதி அமைச்சர் ஹரீஸ்
கல்முனை மாநகர சபையின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் புதிய நகர அபிவிருத்தி திட்டம்தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில்கல்முனை மாநகர சபை கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, கல்முனை பிரதேசசெயலாளர் எம்.எச்.கனி, கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர்களானஏ.எல்.ஏ.மஜீத், ஏ.ஏ.பஷீர், எம்.ஐ.பிர்தௌஸ், உறுப்பினர்களாhன எம்.எம்.முஸ்தபா, எம்.ஐ.அமீர்,எம்.உமர் அலி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ஹரீஸ்,
கல்முனை மாநகர அபிவிருத்திற்கு முதற்கட்டமாக 500 மில்லியன் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காக திட்ட வரைவுகள் உடன் மேற்கொள்ளப்பட்டு இந்நிதிகள்உரிய காலத்திற்குள் செலவு செய்ய மாநகர சபை உத்தியோகத்தர்கள் தயாராக இருக்கவேண்டும்.
கல்முனை மாநகர எல்லைக்குள் பல்லின மக்கள் வாழ்ந்து வருவதனால் சகல மக்களுக்கும் இவ் அபிவிருத்தித் திட்டங்கள் சென்றடைய வேண்டும். இதில் யாருக்கும் அநீதிஇழைக்கப்படமாட்டாது.
மேலும் கல்முனை மாநகர அபிவிருத்தி திட்டத்திற்காக பிரத்தியோக காரியாலயம் ஒன்றும்கல்முனையில் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இத்திட்டம் தொடர்பான இறுதி தீர்;மானங்களை எதிர்வரும் 15ம் திகதி நகர திட்டமிடல்,நீர்வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம்தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்;ந்து அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளில் நான் முழுவீச்சில் செயற்படவுள்ளளேன். இதற்கான முழு ஒத்துழைப்பையும் மாநகர சபைஉத்தியோகத்தர்கள் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
(ஹாசிப் யாஸீன், அகமட் எஸ். முகைதீன்)