எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, July 16, 2016

சாய்ந்தமருதில் பிரதி அமைச்சர் ஹரீஸினால் கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பித்துவைப்பு!

Print Friendly and PDF




கல்முனைப் பிராந்தியத்தில் கடினபந்து கிரிக்கெட் விளையாட்டின் தாய்க் கழகமானசாய்ந்தமருது பிறேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 36வது ஆண்டு நிறைவையொட்டிசாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தின் முழு அனுசரணையில் ரீ-10 கடின பந்துகிரிக்கெட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று (16) சனிக்கிழமை சாய்ந்தமருதுவொலிவேரியன் மைதானத்தில் இடம்பெற்றது.





பிறேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் வங்கியலாளர் எம்.எம்.மசூத் தலைமையில்இடம்பெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும்ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சுற்றுப்போட்டியின் ஆரம்ப போட்டிகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் .எல்.எம்.சலீம்அஸ்லம் பிக் மார்ட்நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் .ஆர்..அஸ்லம் றியாஜ்விளையாட்டுத்துறைபிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் பாவா உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டனர்.

ஆரம்ப போட்டியில் சம்மாந்துறை முபோ விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மருதமுனைபிறைட் பியுச்ச விளையாட்டுக் கழகமும் கல்முனை றினோன் விளையாட்டுக் கழகத்தைஎதிர்த்து சம்மாந்துறை எஸ்.எஸ்.சீ விளையாட்டுக்  கழகமும் மோதியது.

இதில் சம்மாந்துறை முபோ விளையாட்டுக் கழகம் 17 ஓட்டங்களால் வெற்றி பெற்றதுடன்மற்றைய போட்டியில் கல்முனை றினோன் விளையாட்டுக் கழகம் 4 ஓட்டங்களாலும் வெற்றிபெற்றது.


(ஹாசிப் யாஸீன்அகமட் எஸ்முகைதீன்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2