Published On: Friday, March 29, 2013
அரசியல் பெண்மணியின் விபச்சார விடுதி முற்றுகை: மாணவிகள் உட்பட 7 பேர் பிடிபட்டனர்
யாழ். கோவில் வீதியின் இன்று வியாழக்கிழமை விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கத்தவர்கள் அடங்கிய மாநகரசபை உத்தியோகத்தர்களால் இவ்விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது. இதில் 3 ஜோடிகள் உள்ளடங்களாக 7 பேர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விடுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் அமைப்பாளர் நது என்ற பெண்மணியில் பெயரில் இயங்கிவந்துள்ளதாக தெரியவருகிறது. சுற்றிவளைக்கப்பட்டபோது இதில் மாணவிகள் உட்பட 5க்கும் அதிகமான பெண்கள் இனந்தெரியாத ஆண்களுடன் தங்கியிருந்துள்ளனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த யுவதிகளே பிடிபட்டவர்களாவார். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வேலை பெற்றுத்தருவதாகக்கூறி அழைத்துவந்து இந்த விபச்சார விடுதி நடாத்தப்பட்டுவருவதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

(புலனாய்வு செய்தியாளர்)