Published On: Thursday, March 21, 2013
பர்தாவை கேலி செய்தவனுக்கு செருப்பால் 'அபிஷேகம்' செய்த முஸ்லிம் பெண்மணி

குருநாகல் ,பொல்கஹவெல பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் பெண்மணி ஒருவர் தனியார் பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போது பர்தாவை கேலி செய்த நபர் ஒருவருக்கு செருப்பால் அடித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது
இந்தப் பெண்மணி தனது ஊரிலிருந்து குருநாகல் வந்துசெல்லும் போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறியக் கிடைக்கிறது. இது குறித்த மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முயற்சிகள் செய்த போதும் குறித்த பெண்ணின் பாதுகாப்பு நலன் கருதி பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்தச் செய்தியின் நம்பகத் தன்மையை அறிந்து கொள்ளுவதற்காக கிடைத்த தகவலையும் எஸ். எம். எஸ் குறுஞ் செய்தி தகவலையும் வைத்து அந்தப் பிரதேசவாசிகளிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது இச் சம்பவம் முற்றிலும் உண்மை எனவும் பாதுகாப்பு நலன் கருதி அப்பெண்மணியுடன் தொடர்பு கொள்ள முடியாது எனவும் தெரிவிக்கின்றனர்.