Published On: Sunday, March 31, 2013
சாய்ந்தமருதில் தற்கால சூழ்நிலை குறித்து ஆராயும் பொதுகூட்டம்

முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிராக இலங்கையில் ஏற்படுத்தப்பட்டு வரும் கொடூரங்கள், அநியாயங்களைக் கண்டித்தும், இன்றைய நாட்டின் அசாதாரண சூழ்நிலையைில் முஸ்லிம்கள் நடந்துகொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஆராயும் பொதுக்கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இஷாத் தொழுகையைத் தொடர்ந்து சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாயசலில் இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
சாய்ந்தமருது உலமா சபையின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இக்கூட்டத்தில் கல்முனை உலமா சபையினரும் கலந்துகொள்ள உள்ளதாக அறிய முடிகிறது. இக்கூட்டத்தில் எமது முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமையின் மூலம் பல்வேறு தரப்பட்ட அழுத்தங்களை பிரயோகிக்க உள்ளதாகவும் மேலும் தெரிவி்க்கப்படுகி்ன்றது
(நயீமுல்லா)