எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, April 19, 2013

‘வடக்கே போகும் மெயில்’ சிறுகதைத் தொகுதிவெளியீட்டு விழா

Print Friendly and PDF


பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளரும், ‘மெட்ரோ நிய+ஸ் பத்திரிகையின் துணையாசிரியருமான சூரன் ஏ. ரவிவர்மாவின் ‘வடக்கே போகும் மெயில்’ சிறுகதைத் தொகுதிவெளியீட்டு விழாவும், அமரர் ராஜ ஸ்ரீகாந்தன் நினைவு நிகழ்வும் நாளை சனிக்கிழமை பி.ப. 4.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில்  நடைபெறவுள்ளது.

மூத்த ஊடகவியலாளர் வி. தேவராஜ் தலைமையில் இடம்பெறவுள்ள இவ்விழாவில் நூல் அறிமுகத்தை பேராசிரியர் மா. கருணாநிதியும், ராஜ ஸ்ரீ காந்தன் நினைவுரையை பிரபல எழுத்தாளரும், கவிஞருமான மேமன் கவியும், கருத்துரைகளை பிரபல ஆங்கில தமிழ் பத்தி எழுத்தாளரும், பன்னூலாசிரியருமான கே. எஸ். சிவகுமாரன், ஏ.ஆர்.வி. வாமலோஜன் ஆகியோரும் நிகழ்த்தவுள்ளனர்.

பேராசிரியர் சோ. சந்திரசேகரன் வாழ்த்துரை வழங்கவுள்ள ‘வடக்கே போகும் மெயில்’ சிறுகதைத் தொகுதியின் முதற்பிரதியை புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் பெற்றுக் கொள்ளவுள்ளார்.

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2