எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, April 19, 2013

கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் மீது அஸாத் சாலி வழக்கு

Print Friendly and PDF


பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்னிருத்தி கிழக்கு மாகாண அமைச்சர் நஸீர் அஹமதுக்கு எதிராக விரைவில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளர் அஸாத் சாலி தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியால் முஸ்லிம்களுக்கு நிதி வழங்கியமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் நஸீர் அஹமத் மேல் உள்ளன. கட்சிகளை விலைக்கு வாங்குவதும் அவருக்கு கைவந்த கலை. இவ்வாறு இவருக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்டத்தரணிகளுடன் ஆராய்ந்து வருகிறேன். அதன் பின் சட்ட நடவடிக்கையில் இறங்குவேன் என்றும் அஸாத் சாலி மேலும் தெரிவித்தார்.

ஆளும் தரப்புக்கு முஸ்லிமை விலைக்கு வாங்குவதற்கு நஸீர் அஹமது நிதி வழங்கியிருந்தார். எனினும் அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனினும் விலை பேசப்பட்டவரும் விலை கொடுத்தவரும் இப்போது அரசுடனேயே உள்ளனர்.

அஷ்ரப் வழங்கிய நிதியைப் பயன்படுத்தி தனக்கு எதுவும் செய்யலாம் என்ற இறுமாப்பில் நஸீர் அஹமத் செயற்படுகிறார். தேர்தல் ஆணையாளரை பயமுறுத்தி நுஆ கட்சிப் பதிவினை இரத்துச் செய்வதற்கு முயற்சியும் செய்கிறார். இதற்கெதிராக நாம் நடவடிக்கை எடுப்போம். உறுதியுடன் போராடுவோம் என்றும் அஸாத் சாலி கூறினார்.

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2