Published On: Monday, April 08, 2013
பொதுபல சேனா இரு போயாவுக்குள் ஒழிந்துபோகும்: தம்பர அமில தேரர்
பொதுபல சேனா போன்ற அதி தீவிரவாத போக்குடைய இனவாத அமைப்பு இன்னும் இரண்டு போயா தினங்களின் பின் இந்த நாட்டில் இருந்து அடியோடு ஒழிந்து போகிவிடும். முஸ்லிம்களாகிய நீங்கள் இவர்கள் பற்றி பயப்பட வேண்டாம் என்று தம்பர அமில தேரர் தெரிவித்தார்.
.jpg)
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் தம்பர அமில தேரர் தெஹிவளை மூவர்ஸ் சங்கத்தின் 3ஆவது ஆண்டாக நடைபெற்ற மாபெறும் இரத்தான வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்வைபவம் நேற்று தெஹிவளை பள்ளிவாசல் அருகில் உள்ள மீலாத் முஸ்லீம் வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் தெஹிவளை - கல்கிசை மேயர் தனசிரி அமரதுங்கவும் கலந்து கொண்டார். பெருந்திரளான முஸ்லிம்கள் இந்நிகழ்வில் இரத்த தானம் செய்தனர். குறிப்பாக மத்ரஷா மாணவர்கள் கூடுதலாக இரத்த தானம் வழங்கியமை இங்கு குறிப்பிடத்தக்ககது.


(அஸ்ரப் ஏ. சமத்)