எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, April 08, 2013

முஸ்லிம் வர்த்தகர்களுக்கு திராவிடன் சேனையின் இறுதி எச்சரிக்கை துண்டுப்பிரசுரம்

Print Friendly and PDF


திராவிடன் சேனையின் தமிழர்களை காக்கும் போர் வாள் என்ற அமைப்பு உரிமை கோரி எதிர்வரும் 08ஆம் திகதிக்கு முன் தமிழர் தாயக பூமியை விட்டு முஸ்லிம் வர்த்தகர்கள் வெளியேறுமாறு எச்சரிக்கை என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரம் ஒன்று வாழைச்சேனை பிரதான வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை போடப்பட்டுள்ளது.


இறுதி எச்சரிக்கை என்னும் தலைப்பில் வெளியான துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; தமிழர் தாயக பூமியை ஆக்கிரமிக்கும் நோக்கோடு எமது தாயக மண்ணில் வர்த்தகம் செய்யும் இஸ்லாமிய வர்த்தகர்களை வெளியேறுமாறு எச்சரித்தும் அதனை அலட்சியம் செய்த இஸ்லாமிய வர்த்தகர்களே.

எதிர்வரும் சித்திரை 08ஆம் திகதிக்கு முன்னதாக மண்ணை விட்டு வெளியேறுமாறு இறுதியாக எச்சரிக்கின்றோம். வன்முறை எமது வழியல்ல, அதுதான் வழி என நீங்கள் கருதினால் அதைவிட வேறு வழி எமக்கில்லை.

திராவிடன்சேனை தமிழ்களை காக்கும் வாள் என்று போடப்பட்டு வாளின் படமும் அத்துண்டுப் பிரசுரத்தில் போடப்பட்டுள்ளது.

(லோகதக்சன்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2