Published On: Thursday, April 04, 2013
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டுக்கான கலந்துரையாடல்

உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு 2013 ஸ்ரீலங்கா மாநாட்டினை வெற்றிகரமாக செப்டம்பர் 2013இல் இலங்கையில் நடத்துவதற்கான பொதுக்கூட்டமும், கலந்துரையாடலும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் எதிர்வரும் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப. 10 மணியிலிருந்து பி.ப 5 மணிவரை கொழுமப்பு வொக்ஷல் லேனில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இம்மாநாடு தொடர்பான முக்கிய தீர்மாணங்கள் எடுக்கப்பட வேண்டி இருப்பதால் கட்சி பிரதேச பேதங்கள் இன்றி இலக்கிய வாதிகளும், முக்கியஸ்தர்களும் இக்கூட்டத்தில் கலந்து ஆலோசனைகளை முன்வைக்குமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒப்பமிட்டு அழைப்பு விடுத்தவர்களை வேண்டி கடிதம் அனுப்பியுள்ளார்.
(அஷ்ரப் ஏ சமத்)